Monday, July 29, 2013

Sufferings in the deserts

Author: N Vinoth Kumar | ENS
Published Date: Feb 19, 2013 

Malayalam writer Benyamin tells City Express what prompted him to write the award-winning novel Aadujeevitham

We hear only the success stories of Malayalees in the Gulf, but I wanted to highlight their sufferings in those desert regions through my writings, says writer Benyamin. When his Aadujeevitham, a novel based on the real torturous life of a Malayalee, who was a shepherd in one of the Arabian sheepfold in the Gulf got published, it became a new revelation in Malayalam literature. Probably, it was the first work in Malayalam that entered the longlist of Man Asian Literary Prize among 14 other works from Asia.

Benyamin, the author of Aadujeevitham, now considered one of the finest litterateurs of Malayalam, explores the lives in and landscapes of desert countries like the Middle East and Gulf. A native of Pandalam, Kerala, Benyamin, whose real name is Benny Daniels, is working as a project coordinator in one of the electro-mechanical companies in Bahrain. He recently visited Chennai to participate in a literary festival.



“I left for Bahrain in 1992 for a job at the age of 21. In those eight years of bachelor life, I didn’t have any other work other than my regular job. After a while, I developed an urge to read Malayalam classics and new forms of literary works. Then I thought of writing since I had something new to tell the world and the result was some of my writings were published in Malayalam weeklies. In 2000, my debut collection of short stories Euthanasia, got published,” he says.

The collection fetched him Abudhabi Malayali Samajam Award. Till date, he has three short story collections, two non-fictions and five novels to his credit. In 2009, he was presented with the Kerala Sahitya Akademi Award for his novel Aadujeevitham. The book has also been translated into Tamil, Hindi and recently in English as Goat Days.

Aadujeevitham depicts the story of Najib, a Malayali who travels to the Gulf in search of job and is picked by an Arabian sheepfold owner. Najib turns a slave there and becomes a shepherd, who spends life with goats. With the help of his other slave friends in other Masaras (Arabic word for sheepfold), he tries to escape in the desert.



Each and every line of the novel had a poetical touch while narrating the incidents, though he is not confident with writing poems.

“It is truly a biographical sketch with some elements of fiction. The protagonist in the novel named Najib is a real name and a real character who lived in my village. One day my friend asked me to meet him. Najib reminisced his past and I decided to pen it down,” says Benyamin.

He added, “Before I get into writing, I did lot of studies about Malayalees sufferings in the Gulf through news articles published in newspapers and magazines.”

The English translation brought him in the place of Man Asian Literary Prize longlist last year. “There were around 15 writers and I was one among them. It was the first time, I think, a regional work got bigger attention. I was happy to be in the longlist along with great other writers like Orhan Pamuk and Hiromi Kawakami,” he adds.

So, will he tell only stories from the deserts? “I try to explore new stories of different places. But there are many stories from deserts that are yet to be told. Even if I tell the Middle-East stories, I will not follow any particular style of narration,” he says.

At a time when he is considered one of the best writers in Malayalam, City Express asked him about the present scenario of Malayalam literature and he responds, “Yes, it is far well now. Many new set of writers, most of them young, grab the readers’ attention through their works. Malayalees too came out of the habit of watching TV always. Gradually, they are becoming voracious readers and at times, writers.”

“Something haunts inside me and I want to share that with my world and so I am writing. You have to be very honest in writing because the readers have good knowledge about the subject and the story you are telling. It should not be available on the Internet or shown on TV. It is the challenge the new writers are to face,” says Benyamin.

Courtesy: The New Indian Express
Benyamin Photo Courtesy: The Hindu


Tuesday, July 23, 2013

‘Dalit writing inevitable’




Dalit writing in Tamil literary milieu is an inevitable historical need, said well-known writer Azhagiya Periyavan.
He was in the city to receive the Periyar Award conferred by Dravidar Kazhagam, recently.
There was a time in Tamil literature when it was filled with conventional style of writing. In mid-90s, writers from Dalit background grabbed the attention of the readers and Azhagiya Periyavan was one among them. His aesthetic way of writing keeps Azhagiya Periyavan an odd man out of other Dalit writers.
“Critics say that it is both my strength and weakness,” he said.
A native of Pernampet in Vellore district, Azhagiya Periyavan, whose real name is Aravindan, is working as a teacher in a tribal school.
He talks about how he overcame his inferiority complex being a differently-abled and started voicing his views for Dalits.
“I was brought up at my mother’s house near my village. As I am partly disabled, I used to feel very inferior and stayed away from other children. Books were my only pass time then. I used to read around 200 to 300 books in a month,” he says.
He said, “After reading a lot, I was inspired to write. There were many others who had their names as Aravindan and when I searched for a pseudonym to avoid confusion, I found the name Azhagiya Periyavan in one of the books.”
His first novel Theettu appeared in a small journal Kanaiyaazhi was received well by the readers. His short story collections Thisai Ettum Suvargal Konda Gramam, poetry collections Arooba Nanju, Unakkum Enakkumaana Sol,  essay collections  Meelkonam, Kambalippoochi Iravu and a novel Thagappan Kodi, received accolades from both the readers and critics. He received the State Award for best novel in 2003.
One of his short story Kuradu, which was later made into a short film Nadandha Kathai, fetched an award in the Best Indian Short Film category at the International Short Film Festival. All of his works had an internal objective – to voice for Dalits.
“After my college days, I worked in an NGO for a while. At that time, we rescued more than 100 children who worked as bonded labours in beedi-rolling factories and tanneries. They were tied up with chains and made to work for more than 16 hours. And all those children were Dalits. From then on, I wrote to raise my voice for them. Writing for Dalits  is a historical need,” he added.
So, what is his view on Periyar’s thoughts and ideologies? “Periyar’s ideologies have relevance even today. But he is still portrayed as a man who opposed religion. Re-reading and reviving his ideologies are necessary,” he said.
Courtesy: The New Indian Express

Monday, July 22, 2013

Love knows no caste

Author: N Vinoth Kumar | ENS
Published Date: May 30, 2013 9:22 AM

Writer Imayam’s book Pethavan throws light on the ruthless ‘honour killings’ carried out by khap panchayats to oppose inter-caste marriages in Tamil Nadu

Of late, the word ‘love’ is turning out to be an unpleasant one with a section of society and is being perceived as the root cause of all pain. Worse, those falling in love are treated as ‘criminals’.

Members of a politicial party who have been persistent in their demand to have an anti-Cupid crusade in society are to take a part of the blame. While the intellectual community is taking efforts to end the ‘castecentred anti-cupid crusade’ at the ground level, there are some contributions being made in the literary arena too. A short story has now succeeded in creating tough opposing waves against this crusade.

Writer Imayam, a well-noted litterateur in the Tamil literary circle, has penned a short story titled Pethavan last year, which got published in a well-known literary magazine Uyirmai in its September 2012 issue. Widening its reach with each passing day, this 26-page short-story (also called Nedunkathai in Tamil) collection, which has been compiled into a single book, has sold over 18,000 copies till date. At a marriage function in Thiruvarur, around 1,200 copies of Imayam’s book were distributed free of cost to the invitees. It is now being translated in Malayalam and Kannada.
In his story, Pethavan narrates the collapse of a poor Hindu family after a girl in the family gets involved in a love affair with a lower caste boy. The girl, Bakkiyam, also the lead character in the story, falls in love with Periyasamy, a Dalit boy, while at college. When their relationship comes to light, the upper caste families in the village oppose the relationship.

The couple attempt to elope from the village twice and both times, the villagers manage to stop them and brutally punish them by beating them up in public view. When the girl gets caught the third time while trying to elope with the guy, the villagers pass orders for a ‘honour killing’. The panchayat assigns this task to the girl’s father Palani himself. They also warn that if the girl is not killed, she will be raped and murdered by the villagers. To avoid such a horror, Palani, who was also ashamed by her act, agrees to kill his daughter.

However, paying heed to the fervent appeal from Bakkiyam’s grandmother, mother and differently-abled sister, Palani decides to go against the panchayat’s decision and plans to save her daughter instead. The night when the killing is scheduled, Bakkiyam’s father helps her to escape from the village with Periyasamy. With their successful escape and with Palani ending his own life after making sure of his daughter’s safety, the story comes to an end.

Throughout the story, Imayam brings out precedencies of honour killings, quoting examples of the Kannagi Murugesan pair, who were killed a decade ago for the same ‘ inter-caste marriage’.

The unnamed political party plays a vital role in this story and instigates the villagers to engage in honour killing. Interestingly, the story was published after a political party leader’s alleged instigating speech on inter-caste marriage in April at Mamallapuram.

Interestingly, it was after this story was published that there was caste violence in Dharmapuri over a love affair.

“It is a pure co-incidence” said Imayam, relating the story to the party’s anti-cupid crusade. “We say that ours is an educated culture. But with such opposition to love, we have to think twice before terming it an educated one.”

“Tamil culture has always praised love affairs. But, our society today is caste-centric and not Tamil culture-centric. It is to be kept in mind that your daughter has every right to choose her partner. When you, as a parent, become a hindrance, it means you are violating her basic fundamental right. The demeanour activities of some parties are not just aimed at opposing love, but has also been used as a tool to build up a casteist society” he added. “It has been said that they oppose love affairs happening between high caste and low caste people.

But, will they be ready to accept a poor boy if he loves a rich girl from the same caste? Moreover, in general, it is seen that society accepts a relationship between an upper caste boy and a lower caste girl, opposes the relationship when it is between a lower caste boy and an upper caste girl,” Imayam said.

“When one reads this story and gets a bitter feel about the whole caste structure in society, only then I think the story can be said to have attained success,” he concluded.


Courtesy: The New Indian Express

அங்கிள் பாய்!

ந.வினோத் குமார்
ரு ஊர்ல ஒரு ராஜா இருந்தாராம்...’, ‘அது ஒரு பயங்கரமான காடு.அந்தக் காட்டுல ஒரு சிங்கம்...’, ‘வடக்கில இருக்குற ஒரு மலையிலதான் அந்த ராட்சசன் வாழ்ந்துட்டு வந்தானாம்...’

இப்படி கதைகள் கேட்க யாருக்குத்தான் பிடிக்காது?அதுவும் குழந்தைகளுக்கு? சிறுவயதுகளில் பாட்டி சொன்ன மந்திரக் கதைகள், அரையாண்டுத் தேர்வுகள் முடிந்த விடுமுறை காலத்திற்குச் சென்ற சித்தி வீட்டில் கேட்ட சாகசக் கதைகள், நீதிபோதனை வகுப்புகளில் கேட்ட ஆன்மிகக் கதைகள், சற்றே பெரியவன்/ள் ஆனவுடன் எழுத்துக்கூட்டிப் படித்த ‘சிறுவர்மலர்’, ‘தங்கமலர்’ கதைகள், நண்பர்கள் வீட்டிலிருந்து கொண்டு வந்து படித்த பஞ்சதந்திரக் கதைகள், ஐந்தாம் வகுப்பு நெருங்கிய வயதில் படிக்க ஆரம்பித்த ராணி காமிக்ஸ் கதைகள், ஏழாம் வகுப்பு சுதந்திர தின விழா பேச்சுப் போட்டியில் கிடைத்த ‘ஆயிரத்தோரு அரேபிய இரவுக் கதைகள்’... என பதினைந்து வயது நிறைவதற்குள் நாம் கடந்து வருகிற கதைகளின் வகைகள்தான் எத்தனை, எத்தனை?

குழந்தைமைத்தனத்தைத் தாண்டி நாம் பெரியவர்களான போது சிறுகதைகள், ஒரு பக்கச் சிறுகதைகள், சற்றே பெரிய சிறுகதைகள், ஒரு வரிக் கதைகள், அரை பக்கக் கதைகள், ஏடாகூடக் கதைகள், அனுபவக் கதைகள் என நாம் எத்தனை கதைகள் படிக்க நேர்ந்தாலும்,சிறுவயதில் காமிக்ஸில் படித்த இரும்புக் கை மாயாவியின் ‘தங்க வேட்டை’யும், தீரர் தில்லானின் ‘கௌபாய்’ கதைகளும் நம்மை வசீகரித்ததற்கு ஈடாகுமா?

மாயாவி,லேடி ஜேம்ஸ்பாண்ட் மாடஸ்தி,கரும்புலி,கழுகு மனிதன்,தீரர் தில்லான், டார்ஜான் என நம் அரைடிராயர் காலங்களில் நமக்கான கற்பனை உலகில் சீறிப் பாய்ந்து வந்த சாகசக் கதாபாத்திரங்கள்தான் எத்தனை, எத்தனை? காமிக்ஸ் புத்தகங்களைப் படித்துவிட்டு, அதே கதையை நண்பர்களுடன் சேர்ந்து விளையாடிய பொழுதுகளை நீங்கள் இன்றும் நினைவில் வைத்திருந்தால்... நம்மிடம் இன்னும் கொஞ்சம் குழந்தைத் தன்மை ஒட்டியிருக்கிறது என்று உற்சாகப்பட்டுக் கொள்ளலாம்!

என்னைப் பொறுத்த வரையில் ஒரு சீரான வாசிப்புக்கு அடித்தளமாக அமைபவை காமிக்ஸ் புத்தகங்கள்தான் என்பேன்.ஆரம்ப காலங்களில் சிறுவர்மலர், தங்கமலர்... சற்று வளர்ந்த பிறகு காமிக்ஸ் புத்தகங்கள்... அதற்குப் பிறகு வார இதழ்கள்... அதற்குப் பிறகு ராஜேஷ்குமார்,பாலகுமாரன் ஆகியோரின் பாக்கெட் நாவல்கள்... அதன் பிறகு தீவிர இலக்கிய வாசிப்புகள்... அதன் பிறகு நமது சுய தேடல்களில் நாம் வாசிக்கிற புத்தகங்கள்... அதன் பிறகு ஆங்கிலப் புத்தக மோகம்... இப்படித்தான் ஒருவரின் வாசிப்பு வளர்கிறது என்பது என் எண்ணம். எனினும், ஒருவர் தன் பத்து வயதில் நோம் சாம்ஸ்கியைப் படித்தால் அதில் தவறில்லை...  They are born prodigies even though they are protege(e)!

ஆக, ஒரு பரந்த வாசிப்புப் பழக்கத்திற்கு அடிப்படையாக காமிக்ஸ் புத்தகங்கள் அமைந்திருக்கின்றன என்கிற போது,அவற்றின் முக்கியத்துவத்தை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.இருபது ஆண்டுகளுக்கு முன்பு ராணி காமிக்ஸ், முத்து காமிக்ஸ், லயன் காமிக்ஸ் எனப் பல காமிக்ஸ்கள் வந்துகொண்டிருந்தன.இன்று அவற்றை எல்லாம் தேட வேண்டி இருக்கிறது.

ஆனால் 1970&ல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘அமர் சித்ர கதா’ எனும் காமிக்ஸ் புத்தகம்... (அதை காமிக்ஸ் என்று சொல்வதை விட சித்திரக் கதைப் புத்தகங்கள் என்று சொல்வது சரியாக இருக்கும். எனினும், பழக்கமான வார்த்தை என்பதால் ‘காமிக்ஸ்’ எனும் வார்த்தையே பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது!) இன்று வரை சுமார் 450 தலைப்புகளுக்கு மேல் வந்திருக்கிறது.நாட்டுப்புறக் கதைகள்,புராணக் கதைகள், வேடிக்கைக் கதைகள்,சாகசக் கதைகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் புத்தகங்கள் வந்திருக்கின்றன.ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பிரதிகள் விற்றுத் தீர்ந்து கொண்டே இருக்கின்றன.சுமார் பத்து பதிப்புகள் வரை கண்ட புத்தகங்கள் இருக்கின்றன.

இத்தனை சாதனைகளுக்கும் என்ன காரணம் என்று நீங்கள் கேட்டால் அதற்கு ‘டக்’கென்று பதில்சொல்லலாம்... ‘ஆனந்த் பாய்!’

‘அங்கிள் பாய்’ என்றுதான் குழந்தைகள் செல்லமாக அழைப்பார்கள்.அவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது.அவரின் நினைவைப் போற்றும் வகையில் ‘அமர் சித்ர கதா’ நிறுவனமே ‘ஆனந்த் பாய் & மாஸ்டர் ஸ்டோரிடெல்லர்’என்கிற தலைப்பில் அழகிய படங்களுடன் கூடிய காமிக்ஸ் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது.



‘கன்டெண்ட்’டும், ‘இல்லஸ்ட்ரேஷ’னும் நெருக்கி அடித்துக் கொள்ளாத வகையில் படைப்புகளைக் கொண்டு வருவதுதான் அமர் சித்ர கதாவின் ஸ்பெஷல்! இந்தப் புத்தகமும் அதற்கு விதிவிலக்கு அல்ல.மற்ற ஆங்கில காமிக்ஸ் புத்தகங்களைப் போன்று அல்லாது எளிமையான ஆங்கிலம்,கண்ணை உறுத்தாத வகையில் வரையப்பட்ட படங்கள்,நல்ல தாள்,நல்ல கட்டமைப்பு என ஒரு புத்தகத்தில் அனைத்தும் ப்ளஸ்கள் தான்!

‘ஆனந்த் பாய்’என்கிற இந்தப் புத்தகத்தில் அவரின் வாழ்க்கை வரையப்பட்டிருக்கிறது. பெற்றோரை இழந்து, உறவினர்களின் ஆதரவில் படித்து, அக்காவின் சீராட்டலில் வளர்ந்து,ஆசிரியர்களின் அன்பில் நெகிழ்ந்து,மனைவியின் ஒத்துழைப்பில் உயர்ந்து என அவரின் வாழ்க்கைச் சரிதத்தைப் படிக்கிற போது நமக்குள் ஏனோ ஒரு வகை சந்தோஷம் பிறக்கிறது. நம்பிக்கை மழையில் இன்னும் அதிகமாக நனைய ஆசைப்படுகிறது.‘அமர் சித்ர கதா’வை குழந்தைகளிடத்தில் பிரபலப்படுத்த அவர் மேற்கொள்கிற முயற்சிகளைப் படிக்கிற போது நம் மனம் ‘உழைப்பில்’கள்வெறி கொள்ள வைக்கிறது.

அவருடைய வாழ்க்கையில் காதல் வருகிறது.தன் இந்தி வகுப்பிற்கு மாணவியாக வந்த லலிதாவின் மீது அவருக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.தன் காதலை லலிதாவிடம் சொல்லிவிடுகிறார்.இந்த வரியை காமிக்ஸ் புத்தகத்தில் எப்படிக் கொண்டு வருவது என்ற சந்தேகமோ, அல்லது குழந்தைகளின் மனதில் வேறு எண்ணங்கள் ஏதேனும் தோன்றிவிடுமோ என்ற தடுமாற்றமோ இல்லாது மிக இயல்பாக அவர்கள் இருவருக்கும் இடையேயான காதலைச் சொல்லிவிடுவதில் இந்தப் புத்தகத்தின் பாரம்பரியம் மீது நமக்கு இருக்கும் மரியாதை இன்னும் பல சதவிகிதங்கள் அதிகரித்து விடுகிறது.

படங்கள் பற்றி குறிப்பிட்டே ஆக வேண்டும்.ஆனந்த் பாயின் இள வயது முதல் முதுமை வரை அவரின் முகவெட்டை வயதுக்கு ஏற்றபடி வரைந்திருப்பது அவ்வளவு அருமை! இதற்குப் பின் இந்த பலூன்,அதற்குள் இந்த டெக்ஸ்ட், இந்த இடத்தில் இந்தப் படம் வர வேண்டும் என்று பிரிக்கப்பட்ட ‘ஸ்டோரி போர்ட் எடிட்டிங்’ கனக் கச்சிதம்!

தன்னிடம் இந்தி கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் தான் தரும் உணவையும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லி,ஆனந்த் பாயின் வறுமையை அறிந்து அவரை ஆதரித்த ‘தரம்பால்’போன்ற ஆசிரியர்கள் இருந்ததால்தான் நமக்கு ஒரு ‘அங்கிள் பாய்’ கிடைத்தார். அதோ அந்த கொடுங்கையூர் குப்பைக் கிடங்கை நீங்கள் மூக்கைப் பொத்திக் கொண்டு காரில் கடக்கிற போது, உங்கள் கண்களுக்குத் தென்படுகிற குப்பைப் பொறுக்கும் சிறார்களில் எத்தனை பேருக்குள் ‘அங்கிள் பாய்’ மறைந்திருக்கிறாரோ...? ஆனால் அவர்களுக்காக எத்தனை ‘தரம்பால்’கள் காத்திருக்கிறார்கள்? யோசிக்கிற போது... ‘நம் கனவு கூட நாம் தீர்மானிக்கும் விஷயமாக இல்லை’ என்பது தெரிய வருகிறது இல்லையா..?

ஐம்பது ரூபாய் மதிப்புள்ள இந்தப் புத்தகத்தை நீங்களும் வாசியுங்கள்... உங்கள் பிள்ளைகளுக்கும் அதை வழங்குங்கள்!
நன்றி: விகடன்.காம்

Sunday, July 21, 2013

சிறையில் பிறந்த எழுத்துகள்!

ந.வினோத் குமார்
சுதந்திரம் என்கிற விஷயத்தைப் பற்றி அவரவர்க்கும் ஒரு கருத்து இருக்கிறது. யாருடைய கருத்து சரி, யாருடையது தவறு என்பதை அறுதியிட்டுக் கூற முடியாது. ஒரு சமூகத்தில் அடக்குமுறைக்குக் கீழ் உள்ள ஓர் இனம், நாடு எதுவானாலும், அவற்றைச் சார்ந்த மக்களுக்கு எந்தக் கருத்து ‘எல்லோருக்கும் நன்மை’ என்று பொருந்தி வருகிறதோ அதுவே சுதந்திரம் என்று ஏற்றுக் கொள்ளப்படுகிறது.அந்த சுதந்திரத்தை அடைய குறிப்பிட்ட இன, தேச மக்கள் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதும் மாற்றார்களின் ‘சரி, தவறு’ கணக்கீடுகளுக்குள் வைத்துப் பார்க்காமல், எது சுலபமாகவும்,தீவிரமாகவும்,வேகமாகவும் தீர்வைத் தருமோ அதுவே பெரும்பாண்மை மக்கள் ஏற்றுக்கொள்ளும் ஒன்றாக இருக்கிறது.

இதன் அடிப்படையில் நமது தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தைப் பார்த்தால் இரண்டு வகையான போராட்டங்கள் நம் கண் முன்னால் விரியும்.ஒன்று, காந்தி, நேரு ஆகியோரின் தலைமையின் கீழ் பட்டினிப் போராட்டம்,சமரச ஒப்பந்தங்களின் மூலம் ‘டொமினியன் ஸ்டேட்டஸ்’ எனும் மேலாட்சி அரசு முறை என்கிற வகையில் அஹிம்சை வழிப் போராட்டம்.

இரண்டு, நேதாஜி, பகத் சிங் போன்றோரின் தலைமையின் கீழ் இயங்கிய வன்முறைப் போராட்டம். ‘காந்தியின் வழிதான் சரி’ என்று கூப்பாடு போட்டால் பகவத் சிங்கின் உழைப்புக்கும், முன்னெடுத்துச் சென்ற புரட்சிக்கும் நாம் இழைக்கிற அநீதியாக அமையும். ‘பகத் சிங்கின் போராட்டம் சரி’ என்று சொன்னாலும், தண்டியில் காந்தி காய்ச்சிய உப்புக்கு நன்றி மறந்தவர்களாவோம்! ஆகவே, எந்த வழி நல்ல வழி என்று சிந்திப்பதை விட்டுவிட்டு, அவர்கள் தேர்வு செய்து கொண்ட பாதை தந்துவிட்டுப் போன பாடங்களை மட்டும் மதிப்பீடுகளுக்கு உள்ளாக்கவோ, முழுமனதாக ஏற்றுக் கொள்ளவோ செய்யலாம்.

அப்படி தான் தேர்வு செய்த பாதை ஏன் சரி என்பதற்கான நியாயங்களை முன் வைப்பதாகவே இருக்கிறது, பகத் சிங்கின் எழுத்துக்களைத் தாங்கிய ‘தி ஜெயில் நோட்புக் அண்ட் அதர் ரைட்டிங்ஸ்’ எனும் தொகுப்பு. இடதுசாரி சிந்தனைகளைத் தாங்கி வருகிற வெளியீடுகளைப் பதிப்பிக்கும் ‘லெஃப்ட்வேர்ட்’ இந்தத் தொகுப்பைக் கொண்டு வந்திருக்கிறது.




1929, ஏப்ரல் 8! அன்றைய பஞ்சாப்பின் ஒரு பகுதியாக இருந்த லாஹூரில், அந்த இரண்டு இளைஞர்கள் மத்திய சட்டமன்றத்திற்குள் செல்கிறார்கள். ஆங்கிலேயர்களும், ஆங்கிலேயர்களின் கீழ் சேவகம் புரிந்து வந்த இந்தியர்களும் நிறைந்த அந்த அரங்கில் அவர்கள் இருவரும் வெடிகுண்டுகளை வீசுகிறார்கள். குண்டு வீசப்பட்ட அதிர்ச்சியில் பலரும் அங்கும் இங்கும் ஓட, அந்த இருவர் மட்டும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள். மட்டுமல்ல, ‘இன்குலாப் ஜிந்தாபாத்’, ‘ஏகாதிபத்தியம் ஒழிக’ என்றும் வீர ஒலி எழுப்பினார்கள். அந்த நிமிடம் அந்த இருவரின் பெயர்கள் வரலாற்றில் பதிந்தன. பகத் சிங், பாதுகேஷ்வர் தத்தா ஆகியோர்தான் அந்த இருவர்!

அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் தள்ளப்படுகிறார்கள். பாதுகேஷ்வர் தத்தா சோர்வடையத் துவங்க,பகத் சிங் சிந்திக்கிறான்.சிறைக் கம்பிகளுக்குப் பின்னே அவன் விரல்களில் பிரவாகித்த கருத்து வெள்ளம் இன்றைக்குப் புத்தகப் பொக்கிஷமாக நம் கைகளில் தவழ்கிறது.

வாசிப்பதும்,சிந்திப்பதும்,எழுதுவதும் என்பதுதான் சிறையில் பகத் சிங்கினுடைய வாழ்வாக இருந்தது.எத்தனைப் புத்தகங்களை அவன் வாசித்தான் என்பது சிறை இரவுகள் மட்டுமே அறிந்த செய்தி.இந்தப் புத்தகத்தை வாசித்து முடித்த போது, தோராயமான ஓர் எண்ணிக்கையைக் குறிப்பிட வேண்டும் என்றால் 120 புத்தகங்களுக்கு மேல் படித்திருப்பான் என்று சொல்லலாம். அதற்கு மேலும் கூட இருக்கலாம். ஆனால் அவன் வாசித்த புத்தகங்களில் இருந்து எடுத்து வைத்த குறிப்புகள் பலவும் அதன் அருமை தெரியாமல் எரிக்கப்பட்டும், களவாடப்பட்டும் போயின.இருக்கும் குறிப்புகளைத் தொகுத்த போது சுமார் 150 பக்கங்கள் வரை வருகின்றன.எனில் அவன் வாசித்திருக்கக் கூடிய புத்தகங்களின் எண்ணிக்கையை நீங்களே உத்தேசித்துக் கொள்ளலாம்.

ஏப்ரல் 8, 1929 முதல் மார்ச் 22, 1931 வரை (மார்ச் 23-ல் அவன் தூக்கிலிடப்படுகிறான்) அவன் எழுதியது எல்லாம் ‘கடத்தப்பட்டு’ வெளியே கொண்டு செல்லப்பட்டு, அதன் பிறகு நாளிதழ்களில் அச்சிடப்பட்டன. பகத் சிங்கின் படைக்குழு செயலராக இருந்த லஜ்ஜாவதி என்பவர் பகத் சிங்கின் வழக்கு பற்றி விவாதிக்க அவ்வப்போது சிறைக்கு வருவது உண்டு. அப்போது அங்கிருந்த சில நல்ல உள்ளங்களால் 'smuggled out'  ஆன (இப்படித்தான் குறிப்பிடுகிறார் இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை வழங்கிய சமன்லால். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான இவர்தான் ‘பகத் சிங் ஒளர் உன்கே சாத்தியோன் கே தஸ்தாவேஜ்’ என்ற புத்தகத்தைத் தொகுத்தவர்!) கத்தை கத்தையான காகிதங்கள் வெளியில் எடுத்துச் செல்லப்பட்டு, ‘பீப்பிள்’ பத்திரிகையின் ஆசிரியரான ஃபெரோஸ் சந்திடம் ஒப்படைக்கப்படுகிறது. அவற்றை வாசித்து, சீராகத் தொகுத்து அச்சிடுகிறார் ஃபெரோஸ். இப்படி அச்சிடப்பட்டதுதான், புகழ்பெற்ற ‘நான் நாத்திகன் ஏன்?’ என்ற புத்தகம். பகத் சிங் ஆங்கிலேயே அதிகாரத்தால் தூக்கிலிடப்பட்டு கொல்லப்பட்ட பிறகு இந்தக் கட்டுரை செப்டம்பர் 27, 1931-ல் அச்சிடப்பட்டது.

பகத் சிங் எழுதிய பல காகிதங்களை லஜ்ஜாவதி, பிஜோய் குமார் சின்ஹாவிடம் (சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று அந்தமான் சிறையில் இருந்தவர்) 1938-ல் ஒப்படைக்கிறார். எக்காரணம் கொண்டும் இந்தக் காகிதங்களைத் தன் தந்தையிடம் ஒப்படைக்கக் கூடாது என்ற பகத் சிங்கின் உத்தரவுப்படி லஜ்ஜாவதி அப்படிச் செய்தார். சின்ஹாவோ அதை இன்னொரு பெயர் அறியப்படாத நண்பர் ஒருவரிடம் ஒப்படைக்கிறார். அந்த நண்பரோ, போலீஸாரின் ரெய்டுக்குப் பயந்து அவற்றை எரித்துவிடுகிறார். ஆனால் எப்படியோ அந்த பெயர் அறியப்படாத நண்பரின் குடும்ப உறுப்பினர், அநேகமாக குல்பீர் சிங் என்பவர் ‘ஜெயில் நோட்புக்’கை மட்டும் பாதுகாத்தார். பிறகு, அங்கொன்றும், இங்கொன்றுமாகச் சிதறிக் கிடந்த கடிதங்கள், படைப்புகள் ஆகியவற்றைப் பெருமுயற்சியினால் திரட்டி, 1994-ல் பூபேந்தர் ஹ¨ஜா என்பவரால் தொகுக்கப்பட்டு புத்தகமாக அச்சிடப்பட்டது. 1922-2006 வரை வாழ்ந்த இவர் 1940களில் பகத் சிங்கின் புரட்சி அமைப்பில் மாணவத் தொண்டராகச் செயல்பட்டவர். சுதந்திரத்திற்குப் பிறகு பத்திரிகையாளராகப் பணியாற்றியவர்.

இப்படி சிறையில் பகத் சிங் எழுதிய படைப்புகள் வெளியானது பற்றி கூட ஒரு புத்தகம் எழுதும் அளவிற்கு விஷயங்கள் இருக்கின்றன.அவற்றை சமன்லால் சொல்கிற போது, ‘இந்தப் புத்தகம் எத்தகையதொரு வரலாற்று ஆவணம்’ என்று நமக்கு உணர்த்தப்படுகிறது.

பெரும்பாலும்,சிறைக் குறிப்புகள் என்றவுடன், ‘சிறைக்கு இன்று அவர் வந்தார். அரிசியில் புழு நெளிந்தது.பஜனை பாடினோம்...’ என்ற கணக்காகத்தான் இருக்கும் என நினைத்தேன்.ஆனால் இந்தப் புத்தகம் அந்த எண்ணத்தைச் சுக்கு நூறாக்குகிறது.முழுக்க முழுக்க தான் வாசித்த புத்தகங்களில் இருந்து மேற்கோள்கள், முக்கிய தீர்மானங்கள், அலங்காரக் கலப்படங்கள் இல்லாத தன் எண்ணங்கள் ஆகியவற்றைத்தான் பதிவு செய்திருக்கிறான் பகத்.மார்க்ஸின் ‘மூலதன’த்தில் இருந்து, ரூசோவின் ‘சமுதாய ஒப்பந்தம்’, வால்ட்விட்மேனின் கவிதை வரிகள், லெனினின் தத்துவங்கள் என அவன் வாசித்த புத்தகங்களில் இருந்து எடுத்தாண்ட குறிப்புகள் ஒவ்வொன்றும் முத்துக்கள்.

உதாரணத்துக்குச் சில:

* ‘சிறந்த ஆட்சி ஒருபோதும் சுயாட்சியின் இடத்தை நிரப்பாது!’ - ஹென்றி கேம்ப்பெல் பேன்னர்மேன்

* ‘ஒடுக்கப்பட்ட வர்க்கம் என்று ஒன்று இருக்கிறபோது, அங்கே நான் இருக்கிறேன்.
  குற்றம் புரிவதற்கான விஷயம் ஒன்று இருக்கிறபோது, அது நானாக இருக்கிறேன்.
  சிறையில் உயிர் ஒன்று இருக்கிறபோது, நான் சுதந்திரமாக இல்லை!’- யூகின் வி.டெப்ஸ்

* ‘இதோ கிளையின் கீழே ஒரு ரொட்டித் துண்டு,
  ஒரு மதுக்கோப்பை, ஒரு கவிதைப் புத்தகம் - மற்றும் நீ
  என்னருகில் வனாந்தரத்தில் பாடுகிறாய்
  வனாந்தரமே இப்போது சொர்க்கமாகிறது!’ - உமர் கய்யாம்

இவை தவிர, தானும் தத்தாவும் கைதாகி நீதிமன்றத்தில் நிறுத்துகிறபோது அவர்கள் கொடுத்த வாக்குமூலம், ‘புரட்சி வாழ்க!’ என்ற சொல்லாடல் பற்றிய கட்டுரை, ‘நான் நாத்திகன் ஏன்?’,சிறையில் இருந்த போது பகத்தின் தோழன் சுகதேவ் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானான். அப்போது தான் தற்கொலை செய்ய முடிவெடுத்திருப்பதாக பகத்திற்கு கடிதம் எழுதுகிறான்.அதற்கு பதில் அளிக்கும் விதமாக, ‘தற்கொலை குறித்து’ என்று பகத் எழுதிய கடிதம்... அதன் இறுதியில் இவ்வாறு எழுதி இருக்கிறான் பகத் சிங்:

'I do not expect even a bit of moderation or amnesty. Even if there is amnesty, it will not be for all, and even that amnesty will be for others only, not for us;....

....Even then, I wish that release calls for us should be made collectively and globally.'

என்று எழுதியதைப் படிக்கும் போது பேரறிவாளனின் நினைவு வருவதை ஏனோ தடுக்க முடியவில்லை. தன்னுடைய ‘தூக்குக் கொட்டடியில் இருந்து ஒரு முறையீட்டு மடல்’ புத்தகத்தில் ‘நான் என்னுடைய சுயநலத்துக்காக தூக்குத் தண்டனை வேண்டாம் என்று சொல்லவில்லை. மரண தண்டனை என்பதே முற்றாக ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காகப் போராடுகிறேன்’ என்கிற ரீதியில் (வார்த்தைகள் மாறி இருந்தாலும், கருத்து இதுதான்!) எழுதி இருந்ததும், பகத் சிங்கின் மேற்கண்ட வரிகளும் ஒரு மையப் புள்ளியில் ஒத்துப்போவதைப் பார்க்கிறேன். இவற்றுடன், பின் இணைப்பாக, ‘பகத் சிங், ராஜகுரு, சுகதேவ்’ ஆகிய மூவரும் தூக்கிலிடப்பட்ட போது ‘குடியரசு’வில் பெரியார் எழுதிய கட்டுரை ஆகியவையும் தரப்பட்டுள்ளன.

கையில் எடுத்தவுடன் வாசித்து முடித்துவிடக் கூடிய புத்தகம் அல்ல இது. ஒவ்வொரு பக்கத்தையும் ஆழ்ந்து வாசித்து, வாசித்ததை யோசித்து என தலைக்குள் கனத்தை ஏற்றி வைக்கிற புத்தகம். வாசித்து முடித்தவுடன் ‘இப்படி ஒரு வாழ்க்கை நமக்குக் கிடைக்கவில்லையே’ என பகத் சிங்கின் மீதும், அவன் சென்ற பாதையின் மீதும் விருப்பம் ஏற்பட்டால்... அது நீங்கள் அடையும் பேறு!
நன்றி: விகடன்.காம்

ஊரடங்கிய இரவு!

ந.வினோத்குமார்
A bloodstained label
Stuck to his lapel
Reads: In...
Does it mean 'Indian, Informer, Intruder, Insurgent?'
It bewilders to make it read 'Innocuous Innocent.'
சொந்த ஊர், சொந்த மண் என்பது அங்கே இருக்கும் உங்கள் வீடு மட்டுமானது அல்ல. அல்லது அந்த ஊரில் உங்களுக்கு இருக்கும் நிலங்கள், சொத்துக்கள் என்பவையும் அல்ல. அங்கே குடியிருக்கும் உங்கள் உறவினர்களோ, நண்பர்களோ அல்ல. காலம் காலமாக அந்த மண் சந்தித்து வரும் மாற்றங்கள், இழந்து வரும் புராதனங்கள், எதிர்கொள்ளும் துயரங்கள், அமிழ்த்தி வைக்கப்பட்ட சோகங்கள்... இவைகளினூடே இருக்கும் ஒடுக்கப்படல் நிகழ்வுகளும், விடுதலைக்கான கனவுகளுமாகச் சேர்ந்து புவிப்பரப்பில் தனக்கானஎல்லைகளை வரைந்து கொண்டு மதம், இனம், கலாச்சாரம் போன்ற உங்களுக்கான அடையாளங்களைத் தருவதுதான் சொந்த ஊர் என்பது. 'இந்த ஊரில் இருந்து வருகிறேன்’ என்று நீங்கள் சொன்னால் அது உங்கள் வீட்டு முகவரியைக் குறித்ததானது அல்ல. நீங்கள் வாழும் ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக இருக்கிறீர்கள் என்பதுதான் பொருள்.
 அவ்வாறாக ஒரு சமூகத்தின் பிரதிநிதியாகத் தன்னை முன்னிறுத்திக் கொண்டு, தன் சமூகத்தில், தன் சொந்த ஊரில் நிகழ்ந்த, நிகழ்ந்து கொண்டிருக்கிற விஷயங்களின் மீது வெளிச்சம் பாய்ச்சி, நமக்கு ஒரு வாழ்வனுபவத்தை அறிமுகப்படுத்துகிறார் பஷரத் பீர். அவரின் சொந்த ஊர்... காஷ்மீர். தன் ஊரைப் பற்றி அவர் சொல்வதற்குத் தேர்வு செய்துகொண்ட தளம் எழுத்து. அந்த எழுத்தில் உருவான அற்புதமான படைப்புதான் 'கர்ஃப்யூட் நைட்’ எனப்படும் இந்தப் புத்தகம்!
'வெள்ளைப் பனி மழை பொழிகிற அழகான ஊர்... ரோஜாக்களும், ஆப்பிள்களும் நிறைந்திருக்கிற அற்புதமான ஊர்...’ என்பன போன்ற எந்த அலங்கார வார்த்தைகளையும் பயன்படுத்தாமல்... 'காஷ்மீரின் ஒரு குளிர்காலத்தில் நான் பிறந்தேன்...’ என்று மிக எளிமையாக ஆரம்பிக்கிறபோதே நமக்குத் தெரிந்துவிடுகிறது... அடுத்து வரும் பக்கங்களில் எல்லாம் உண்மை பொதிந்து ஓர் ஆவணத்திற்கு உண்டான குணாதிசியங்களோடு இருக்கப் போகிறது புத்தகம் என்பது! உண்மை எப்போதும் தன்னை எளிமையாகத்தான் வெளிப்படுத்திக் கொள்கிறது. இல்லையா..?
 ‘LoC (Line of Control)'!  இதுதான் புத்தகத்தின் அடிநாதம். நம்மைப் பொறுத்தவரை இன்றும் கூட காஷ்மீர் என்பதை வெறும் சுற்றுலா தலமாகவும், சினிமா டூயட் ஷூட்டிங்கிற்கான லொகேஷனாகவும்தான் நமக்குள் படிந்திருக்கிறது. இஸ்லாமியத் தீவிரவாதிகளின் ஊடுறுவல் நுழைவாயிலாக அது நமக்குக் காட்டப்படுகிறது. உண்மையில் காஷ்மீரின் வரலாறு ரத்தமும், ஆயுதங்களும், மரண ஓலமும் கலந்த ஒன்று. சுதந்திரத்திற்குப் பிறகு சர்தார் வல்லபாய் படேல் அவர்களின் முயற்சியால் சமஸ்தானங்கள் எல்லாம் ஒன்றிணைந்தன. ஆனால் காஷ்மீர் யோசித்தது. காரணம், அங்கே ஆட்சி செய்வது இந்து மன்னன் ஹரி சிங் ஆக இருந்தாலும், அங்கே இருந்த பெரும்பாண்மை மக்கள் இஸ்லாமியச் சகோதரர்கள். 1947-ல் இந்தியாவில் இருந்து ஜின்னா பாகிஸ்தானைப் பிரிக்கிறார். அப்போது காஷ்மீர் எங்களுக்கு வேண்டும் என்கிறார்கள் பாகிஸ்தானியர்கள். ஆனால் காஷ்மீரில் இருந்த மக்களோ இந்தியாவுடன்தான் இணைவோம் என்றார்கள். காஷ்மீரில் இருந்த இஸ்லாமியர்கள் ஷேக் முகமது அப்துல்லா என்பவரின் கீழ் அணி திரள்கிறார்கள். அவரும் இந்தியாவுடன் இணைய, மகாராஜா ஹரி சிங்கிற்கு ஒத்துழைப்புத் தருகிறார். காஷ்மீர் இந்தியாவில் இணைகிறது. ஆனால் அதற்குப் பிறகு பாகிஸ்தான் அவ்வப்போது காஷ்மீரின் மீது உரிமை கொண்டாடுவது தொடர, 1949-ல் ஐ.நா. மக்கள் வாக்கெடுப்பு (plebiscite) ஒன்றை நிகழ்த்துகிறது. அதன் அடிப்படையில் LoC  ஒன்று ஏற்படுத்தப்படுகிறது. ஆயிரம்தான் ஐ.நா.வே தலையிட்ட பிறகும், தன் வால்தனத்தை பாகிஸ்தான் விடுவதாக இல்லை. காஷ்மீர் இளைஞர்களை 'எல்.ஓ.சி.’ வழியாக வரவழைத்து அவர்களுக்குத் தீவிரவாத பயிற்சி அளித்து, மீண்டும் காஷ்மீருக்குள் ஊடுருவ விடுகிறது பாகிஸ்தான். இதற்கு 'ஹிஸ்புல் முஜாஹிதீன்’ போன்ற தீவிரவாத அமைப்புகளும் உதவி புரிகின்றன. இத்தகைய தீவிரவாத அமைப்புகளுக்கு மாற்றாக ''Jammu and Kashmir Liberation Front (JKLF)', எனினும், இந்த அமைப்புகளுக்கு இடையே Insurgent Vs Counter-Insurgent'  எனும் வகையில் மோதல் ஏற்படுகிறது.
 இந்தப் பிரச்னையைக் கருவாக எடுத்துக் கொண்டது அதன் பின்னணியில் தன் வாழ்வனுபவத்தைச் சொல்லிச் செல்கிறார் பஷரத். 'ரெடிஃப்’, 'தெஹல்கா’ போன்ற ஊடகங்களில் பத்திரிகையாளராக இருந்தவர் பஷரத் பீர். இணையப் பத்திரிகையில் பணியில் இருந்த போது காஷ்மீர் பகுதிக்கான செய்தியாளராக டெல்லியில் இருந்து பணியாற்றியவர் இவர். அப்போது காஷ்மீர் பற்றி எழுத வேண்டும் என்று அவருக்கு எண்ணம் தோன்றுகிறது. அதனால் தன் பணியை விட்டுவிலகி தன் ஊரான ஆனந்த்நாகிற்குத் திரும்பிச் செல்கிறார். காஷ்மீர், ஸ்ரீநகர், சோஃபியன் போன்ற பல பகுதிகளுக்குச் சென்று 'எல்.ஓ.சி.’ தாண்டி தீவிரவாதப் பயிற்சிக்குச் சென்ற இளைஞர்கள், மத அடிப்படைவாத அமைப்புகளால் பாதிக்கப்பட்ட அப்பாவிகள், இந்திய ராணுவத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்களின் கதைகளைத் தொகுக்கிறார். மீண்டும் அவர் பத்திரிகையாளராக, 'தெஹல்கா’வில் சேர்ந்த பிறகு இந்தப் புத்தகம் தோற்றம் கொள்கிறது.
 தன் இளவயது வாழ்க்கை, பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்தல்... என்று இரண்டு பகுதியாக நம்மால் இந்தப் புத்தகத்தைப் பிரிக்க இயலும். ஆனால் அப்படி ஒரு பிரிவு இருப்பதான தோற்றத்தை ஏற்படுத்தாத வகையில் சம்பவங்களைக் கோர்த்திருக்கிறார் பஷரத். எந்த ஓர் இடத்திலும், எந்த ஒரு சம்பவமும் வலிந்து திணிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. 'ஏ.கே.47-ஐ தீவிரவாதப் பயிற்சி பெற்ற இளைஞர்கள் 'கலாஷ்னிகோவ்’ என்று சொல்வது, டெல்லியில் தன்னை ஒருவர் காஷ்மீர் என்று அறிமுகப்படுத்திக்
கொண்டால் அவர் பெறுகிற புறக்கணிப்பைச் சொல்வது, காஷ்மீரின் ஒவ்வொரு கிராமத்தில் இருந்து இன்னொரு கிராமத்திற்குச் செல்லும் போது அங்கே வைப்பட்டிருக்கிற செக் போஸ்ட்டில் உடல் தடவி சோதனை செய்வார்கள். அதுவே பழக்கமாக, ஒவ்வொரு முறை தன் வீட்டிற்குள் நுழையும் போதும் வீட்டு நுழைவாயிலில் கைகளைத் தூக்கி நிற்கிறார் ஒருவர். அதை ஒருவித புது நோய் என்று சொல்லி யாராவது அவரை 'செக்’ செய்தால்தான் வீட்டிற்குள் அவர் நுழைவார் என்று சொல்லும் நிகழ்வு என ஏகப்பட்ட டீட்டெய்ல்!
நமக்கு ஏதோ காஷ்மீர் என்பது ஹரி சிங் எனும் மன்னரால் ஆட்சி செலுத்தப்பட்ட ஒரு சமஸ்தானமாகத்தான் நமது பள்ளி வரலாற்று நூல்கள் சொல்லி இருக்கின்றன. உண்மையில், 16-ம் நூற்றாண்டில் தன் சுயத்தை முகலாயர்களிடத்தில் இழந்தது காஷ்மீர். பிறகு 18-ம் நூற்றாண்டில் ஆப்கன் அரசன் அஹமத் ஷா அப்தாலியிடம் வருகிறது. அதன் பிறகு 19-ம் நூற்றாண்டில் ரஞ்சித் சிங் எனும் சீக்கியரிடத்தில் வருகிறது. இறுதியாக 1846-ல் ஆங்கிலேயரிடத்திற்கு வருகிறது. சில சமரசங்கள், ஏமாற்றுதல்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவிடமே சேர்கிறது எனும் வரலாற்றை இந்தப் புத்தகத்தின் வழியே நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது.
 காஷ்மீரைப் பற்றிச் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டு, அவர்கள் வந்தார்கள், இவர்கள் வந்தார்கள் என்று பழங்கதைகளைப் பேசாமல், கிலானியின் வழக்கு, நாடாளுமன்றத் தாக்குதல் போன்ற 'கன்டெம்பொரரி’யான நிகழ்வுகளையும் இணைத்து எழுதி இருப்பதால், இந்தப் புத்தகத்தின் உண்மைத்தன்மை படிக்கப் படிக்க உயருகிறது.
 1990-க்கு முன்பு வரை காஷ்மீர் பகுதி இஸ்லாமியர்கள் திருமணச் சடங்குகளை இரவிலும் தொடர்ந்திருந்தார்கள். ஆனால் அந்த வருடத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில், இரவு நடக்க இருந்த மணமகள் வீட்டுப் புறப்பாடு நிகழ்ச்சி எனும் சடங்கின் போது அந்தப் பயணத்தில் இந்திய ராணுவம் மணப்பெண்ணைக் கற்பழிக்கிறது. இது நடந்து சுமார் பதினைந்து வருடங்களுக்குப்  பிறகு அந்தத் தம்பதியினரைச் சந்திக்கிறார் பஷரத். அவர்கள் மட்டுமல்ல... ஊரடங்கு இரவுகளின் போது ஒவ்வொரு வீடாகக் கதவைத் தட்டிச் சோதனை செய்து, விசாரணை என்று கொண்டு சென்ற தம் மக்களைக் காணாமல் போகச் செய்த இந்திய ராணுவத்தை எதிர்த்து தன்னைப் போன்று மக்களைத் தொலைத்தவர்களுக்காக இந்திய ராணுவத்தால் 'காணாமல் போனவர்களின் பெற்றோர் கூட்டமைப்பு’ எனும்  அமைப்பு ஒன்றை ஏற்படுத்திப் போராடி வரும் ப்ரவீணா அஹாங்கர், இந்திய ராணுவத்தின் விசாரணை என்ற பெயரில் நடைபெற்ற கொடூரங்களில் தங்களின் உறுப்புகளில் மின்சாரம் பாய்ச்சப்பட்டு, அதனால் உயிரணுக்களை இழந்து திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் நண்பர்களின் உறவுகள், இந்தப் பிரச்னைகளால் இடப்பெயர்வுக்கு உள்ளான 'பண்டிட்’ குடும்பங்கள்... அப்படி ஒரு குடும்பத்தில் இருக்கும் தன் ஆசிரியர் ஒருவரைச் சந்திக்கச் செல்கையில் அந்த ஆசிரியர் தான் எழுதிய 'எடர்னல் சின்’ எனும் கவிதைப் புத்தகத்தை பஷரத்துக்குப் பரிசளிக்கிறார். அந்தப் புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு கவிதைதான் மேலே நீங்கள் கண்டது!
 இப்படிப் பல நிகழ்வுகளைச் சொல்லி, இறுதியில் 2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் இரு நாடுகளுக்கு இடையே காஷ்மீரில் இருந்து பேருந்து சேவை விடப்படுகிறது. 'எல்.ஓ.சி.’யைத் தாண்டி இருபக்க மக்கள் தங்களின் உறவுகளைச் சந்திக்கிறார்கள் என்பதுடன் நிறைவடைகிறது இந்தப் புத்தகம்.
இந்தப் புத்தகம் ஒருவரின் சுயசரிதை அல்ல. இது ஒரு நரேட்டிவ் ஜர்னலிஸம்! நினைவலைகள்.... ரிப்போர்டேஜ் என்று வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம். எப்படிச் சொன்னாலும் இந்தப் படைப்பு மிக ஆழமான ஒன்று. அழகான ஒன்று!
நன்றி: விகடன்.காம்